இடுகைகள்

சமீபத்திய இடுகை

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

படம்
ஓரிரு ஆண்டுகளுக்குள்‌ முன்னும்‌ பின்னுமாய்‌ பல கொடிய நிகழ்வுகள்‌ அரங்கேறிவிட்டன. 'ராகிங்‌' கொடுமைக்குத் தப்ப முடியாமல்‌ போன அண்ணாமலைப்‌ பல்கலைக்‌கழக மாணவர் நாவரசு. பருந்துகளின்‌ கொடூர நகங்களுக்குப்‌ பிடிபடாமல்‌ தப்பியோடிய கோழிக்குஞ்சு போல்‌ மாணவி சரிகா. கணவன்‌ கைப்பிடித்தும்‌ கருக்கப்பட்ட மலர் பாண்டிச்சேரி பார்வதி ஷா. வாழ்க்கை - இவர்களுக்கு முடிந்து விட்டது - மீள முடியாத இவர்களின்‌ வாழ்வு முடிவை மரணம்‌ என்று சொல்வதை விட 'வன்கொலை' என்று சொல்வதே பொருத்தம்‌. பார்வதி ஷாவின்‌ கொலை பாண்டிச்சேரியை மட்டுமல்ல; மாணவர்கள்‌ நாவரசு, சரிகா கொலை போலவே தமிழ்கூறும்‌ நல்லுலகை உலுக்கி எடுத்திருக்கிறது. பார்வதி ஷா கொலை அம்பலப்படுத்துதலில்‌, ஊடகங்கள்‌, மக்கள்‌ உரிமை அமைப்புகள்‌, சமூக இயக்கங்கள்‌ முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கின்றன. பி.யூ.சி.எல்‌ உறுப்பினர்கள்‌ மற்றும்‌ சமூக அக்கறை கொண்டவர்கள்‌ சாலை மறியலைத்‌ தொடங்குகிறார்கள்‌. பொதுமக்களின்‌ விழிப்புணர்வும்‌ சமூக அக்கறையும்‌ ஏதோ ஒரு புள்ளியில்‌ சமூக நடவடிக்கையாக மாறக்‌ காத்திருக்கின்றன. அது தொடங்கி வைக்கப்படுகிறது. குற்றவாளியான கமல்‌ ஷா

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

படம்
கி.பி.அரவிந்தன் நினைவேந்தல், சென்னை, 19 மார்ச் 2015 பிரபஞ்சன் முதலாம் ஆண்டு நினைவு மற்றும் பரிசு வழங்கும் விழா 21-12-2019 கே.ஏ.குணசேகரன் நினைவாஞ்சலி மக்கள் கலைஞர் கே.ஏ.குணசேகரன் நினைவாஞ்சலி பிரபஞ்சனுக்கு பிரியா விடை கவிக்கோ அப்துல் ரகுமான் அஞ்சலி தோழர் டொமினிக் ஜீவா அவர்களின் நினைவுகளைப் பகிர்தலும் கெளரவித்தலும் - 14 பிப்ரவரி 2021

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

படம்
கரிசல் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான தோழர் பா.செயப்பிரகாசம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கடந்த 23-10-2022 அன்று காலமானார். 1941 ஆம் ஆண்டு விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் என்கிற கரிசல் கிராமத்தில் பிறந்த பா.செயப்பிரகாசம் மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த காலத்தில் கிளர்ந்தெழுந்த 1965 ஆம் ஆண்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராடத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர். அப்போராட்டத்தில் பங்கேற்றமைக்காகக் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டைச் சிறையில் மூன்று மாத காலம் அடைபட்டிருந்தார். அந்த நாட்களில் திராவிட இயக்கப் பிடிப்போடு இருந்தவர், காலப்போக்கில் திமுக மீது அவநம்பிக்கையுற்று மார்க்சிய லெனினிய இயக்கத்தோடு தன்னைப் பிணைத்துக்கொண்டார். கரிசல் வாழ்க்கையை அவருக்கே உரிய தனித்த மொழி, நடையில் தன் சிறுகதைகளில் எழுதினார். 1960களில் நேரு யுகம் முடிவுக்கு வந்து, சுதந்திர இந்தியா விரித்த கனவுகள் ஏதும் நிறைவேறாத ஏமாற்றத்தில் இந்தியா தள்ளாடிக்கொண்டிருந்த காலத்தில் தன் கரிசல் மண்ணில் வாழ்க்கை சீர்குலைந்ததைத் தன் ஒவ்வொரு சிறுகதையிலும் வாசகர் நெஞ்சம் பதைபதைக்க எழுதினார். ஒரு ஜெருசலேம், அம்

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆஸ்திரேலியா SBS ரேடியோ

படம்
கரிசல் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் நேர்காணல் ஆஸ்திரேலியா SBS ரேடியோ சிட்னி - 27 ஜனவரி 2013

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

படம்
கரிசல் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் நேர்காணல் ஆல் இந்தியா ரேடியோ - AIR (வானொலி) புதுச்சேரி (பாண்டிச்சேரி) - 21 பிப்ரவரி 2020 (மறு ஒளிபரப்பு - 31 அக்டோபர் 2022)

நூல் வெளியீடு உரை காணொளிகள் - பா.செயப்பிரகாசம்

படம்
தோழர் பா.செயப்பிரகாசம் உரை - "இலங்கையில் தமிழீழம்" (Tamil nation in srilanka) எனும் நூலாசிரியர் - ரான் ரைட்னவருடன்  ஒரு கலந்துரையாடல் 13-11-2011 புதுச்சேரி கோ.கேசவனின் திறனாய்வாளுமை - நூல் வெளியீட்டு விழா - எழுத்தாளர் சூரியதீபன் - 01 November 2014 பா.செயப்பிரகாசம் உரை | அகரமுதல்வன் - உலகின் மிக நீண்ட கழிவறை மக்கள் கலைஞர் கே.ஏ.குணசேகரன் நினைவாஞ்சலி அழியாத கோலங்கள் @pathayam book release function மாவீரன் பண்டாரவன்னியன் – கண்ணகி நூல் வெளியீட்டு விழா, நோர்வே - பேச்சு சென்னையில் இடம் பெற்ற பண்டாரவன்னியன் நூல் வெளியீட்டு விழா - தலைமை உரை - எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் "அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு" நூல் வெளியீடு, சென்னை புத்தககண்காட்சி - 08 ஜனவரி 2012 தோழர் சண்தவராசா அவர்களின் மனுஷி

இலக்கியப் பிரச்சினைகள் - தலித் எழுத்து

படம்
அமைதி ஊன்றிய இரவில்‌ விம்முதலாய்‌, புடைத்தலாய்‌, வீரியமாய்‌, கனிவாய்‌, காதலாய்‌, ரகசியம்‌ பேசுவதாய்‌ பல தினுசுகளில்‌ இறங்கும்‌ மழை போல்‌ இருக்குமா? முன்னும்‌ பின்னும்‌, பக்கவாட்டிலும்‌ நமக்குள்‌ காற்றைக்‌ கொண்டு வந்து சேர்க்கிற ஊஞ்சல்‌ போல்‌ அசையுமா அது? இனிப்பான பொழுதுகளை எதிர்நோக்கிப்‌ போகும்‌ உல்லாச யாத்திரை போல இருக்கக்‌ கூடுமா? மழை இசையை ரசிப்பது போலவோ, ஊஞ்சல்‌ ஆட்டம்‌ ஆகவோ, உல்லாசப்‌ பயணக்‌ களிப்பு மாதிரியோ, இம்மாதரியான மனநிலையை தலித்‌ வாழ்வு பற்றிய வாசிப்பு தந்துவிடாது, உல்லாச மனப்போக்கு கொண்ட ஒ௫ பேனா அவர்கள்‌ வாழ்நிலைகளைப்‌ பேசாது, பொதுவான கலை, இலக்கிய வாசிப்பு மனநிலைக்கும்‌, ஒடுக்குப்பட்ட அந்த ஜீவன்களின்‌ இலக்கியத்துக்கும்‌ வெகு தூரம்‌. அவர்கள் பொருளாரதாரத்தின் பாதாளத்தில்‌ கிடந்து முண்டுகிறார்கள்‌, யாருக்கோ நிலத்தைக் கீறிக்கொண்டு அலைகிறார்கள்‌. குடிக்கிற நீருக்கு பொது கிணற்றிலிருந்து, நீர் நிலையிலிருந்து தூர நிறுத்தப்படுகிறார்கள்‌. மீறினால்‌ உள்ளிருக்கும்‌ ஒருதுளி சுரணையையும்‌ எடுத்துவிடும்‌ சாதிச்‌ சவுக்கு விளாசுகிறது. அவனுக்காகப்‌ பேசுவது, அவனுக்காகப்‌ படைப்பது, அவனுக்காக ப

கி.ரா.வின்‌ கன்னிமை

படம்
முழங்கால்‌ புழுதி பறக்கிற சின்னத்‌ தெருக்களின்‌ முற்றத்தில்‌ பாட்டியின்‌ மடியில்‌ படுத்துக்‌ கொண்டு கதைகள்‌ கேட்டதுண்டு. மென்மையாக வாழைத்‌ தண்டைத்‌ தடவி விட்டது போல்‌ தெக்குப்‌ பக்கத்துக்கே உரிய காற்று விசாரித்துப்‌ போவதுண்டு. எங்களுக்குக்‌ கதைகள்‌ சொன்ன பாட்டி, பாட்டன்மார்கள்‌ காணாமல்‌ போய்விட்டார்கள்‌. எங்களுடைய வாழ்க்கை முறை வேறாகிக்‌ போய்விட்டதனாலே, பழைய காட்சிகளும்‌, அனுபவங்களும்‌ கை நழுவிப்‌ போய்விட்டன. வாழ்க்கைப்‌ பிரவேசத்தில்‌ நிற்கிற மணத்‌ தம்பதியர்‌, பல்லக்கில்‌ ஏறி அந்தச்‌ சின்ன ஊரில்‌ மூன்று நாள்‌ பட்டணப்‌ பிரவேசம்‌ வருவதை - ஊராங்கி வருவதை நாங்கள்‌ இழந்து விட்டோம்‌. பருத்தி எடுப்புக்‌ காலத்தில்‌, கூலிப்‌ பருத்தி எடுத்துச்‌ சீனிக்‌ கிழங்கும்‌, பயறும்‌ வாங்கி மூணு நேரமும்‌ வயிறு நிறைத்ததை இழந்து விட்டோம்‌. இழந்ததை எடுத்துக்‌ கொடுக்கிற இடத்தில்‌ ராஜநாராயணன்‌ நிற்கிறார்‌. காணுகிற காட்சிகளுக்கும்‌, அனுபவிக்கிற நிகழ்ச்சிகளுக்கும்‌ அதன்‌ இள நிறத்திலேயே வடிவம்‌ தந்து விடுவதென்பது இயற்‌ பண்பியல்‌. அதனைச்‌ சீரணித்துத்‌ தன்மயமாக்கி அதற்கப்பால்‌ எடுத்துச்‌ செல்வதென்பது யதார்த்தவாதம். அ

உலக தமிழ் மாநாடு - இளம் ஆய்வாளர்களுக்கு வேண்டுகோள்

படம்
3 ஜனவரி 2010

யமுனா ராஜேந்திரன் கட்டுரை குறித்து கடிதம்

அன்புள்ள யமுனா, தமிழர் அரசியலின் சாபம் கட்டுரை கண்டேன். தமிழரின் சாபம் எங்குள்ளது என மிக நுணுக்கமாக கண்டடைந்துள்ளீர்கள். உணர்ச்சி வசப்படுதலில், உணச்சிவயமான பின்பற்றுதலில், சார்ந்து நிற்பதில் தங்கியுள்ளது. இது சனநாயகம் கருதப்படாத, அதனை மக்களோடு இணைத்துக் கொள்ளாத செயல் முறையினாலேயே பிறக்கிறது. அதாவது முதலில் ஒவ்வொருவருக்கும் சிந்திப்புத திறன் இயல்பானது என ஏற்றுக் கொள்ளல் வேண்டும், அளவில் முன் பின் இருக்கலாம், ஆனால் அதை ஏற்றுக் கொள்ளவே ஒரு சனநாயகம் வேண்டும். மேதமை என்பதே பிம்ப வழிபாட்டை உருவாக்கும் ஒரு ஊற்றுக் கண்தான். சமீபத்தில் சட்டமன்றக் கூட்டத்திலேயே நிதி அமைச்சர் ஒ.பன்னிர்செல்வம்  அழுத அழுகை தாங்கொனாதது. அது தமிழில் இருப்பதால் என்னால் அனுப்ப இயலவில்லை. இணையத்தில்  தினமலர் கிடைக்குமானால் இம்மாதம் 5-ந்தேதி பாருங்கள். " முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான விடுதலை அரசியல் " என்ற எனது கட்டுரை மே காலச்சுவடில் வெளிவருகிறது. அதனை தனியாக அஞ்சலில் அனுப்பியுள்ளேன். அதற்குரிய font-ம் இணைத்துள்ளேன். பா.செ 10 ஏப்ரல் 2012

கீற்று நெருக்கடி

யமுனா ராஜேந்திரன் மற்றும் கி.பி.அரவிந்தனுக்கு பா.செயப்பிரகாசம் எழுதிய மின்னஞ்சல்

இது ஒரு கனவின் மீதி

படம்

பா.செ எனும் பண்பாட்டுப் போராளி - இரா.காமராசு

படம்
வெகுமக்கள் இயக்கங்களில் இருந்தே நாயகர்கள் உருவாகிறார்கள். வரலாற்றில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் போராட்டங்களே எதிர்காலத் திசைவழியைத் தீர்மானித்துள்ளன. கூட்டுச் செயல்பாடும், கூட்டுத் தலைமையும் என்பதான சனநாயகப் பண்பே மார்க்சியர்களின் வழி என்றாலும் வரலாற்றில் தனிநபர் பாத்திரம் என்பது மறுக்கப்படமுடியாதது. இந்திய விடுதலைப்போர் பலருக்கு நாடு, தேசியம் சார்ந்த உந்துதலைத் தந்தது. தொடர்ந்து சமத்துவத்துக்கான இயக்கங்கள் வழி சமூக அா்பணிப்பு மிக்க ஆளுமைகள் உருவாயினர். தமிழ்நாட்டில், மொழி, இனம், நிலம் அடிப்படையிலான உரிமை கோருதல் என்ற முழக்கம் இந்தியத் துணைக்கண்டத்தின் புதுமை. அதிலும் இந்தி மொழி ஆதிக்க எதிர்ப்பு என்பது தேசிய இனங்களின் விடுதலை நோக்கிய முதற்புள்ளியாக அமைந்தது. அப்படித் தொடங்கி நடந்த இந்தி ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்தில் 1965ல் மதுரை தியாகராசர் கல்லூரி மாணவராய் இருந்து போராட்டத்தில் குதித்தவர் பா.செயப்பிரகாசம். கரிசல் காட்டின் எளிய விவாசயக் குடும்பப் பின்னணியில் வந்தவர். மொழி, இன உரிமை வேட்கையில் அப்போதிருந்த திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். கா.காளிமுத்து, நா.காமராசன் ஆகிய சக கல்லூரி சகா

கணையாழி மே 2020 இதழ் பற்றி ம.ரா.வுக்கு கடிதம்

படம்
அன்பு நண்பருக்கு,  நேற்று தங்களுடன் உரையாடியதின் தொடர்ச்சியாக இதனைக் கொள்ளலாம். எனது ”வெளியேற்றம்” கதை இதனுடன் இணைத்துள்ளேன். செழுமைப்படுத்தப்பட்ட இதனையே தாங்கள் பயன்படுத்தலாம். சிறுகதை என்றோ, குறுநாவல் என்றோ பக்கங்களுக்கேற்ப அடையாளமிட்டுக் கொள்க. மே இதழில் தலையங்க உரை வழக்கம் போல் சுயமான எடுத்துரைப்பு பாணியைக் கொண்டுள்ளது. ”வயிறு இழந்தவர்களையும் வாய்ப்பு இழந்தவர்களையும் கை கழுவச் சொல்கிறது” என எப்படியொரு சமூகப் பாசிசம் அரசியலால் கட்டமைக்கப்படுகிறது என்பதை விளகுகிறது. ’ஒவ்வொரு வர்க்கத் தட்டுக்கும் வேறுவேறானது சுமை’ என சுமையை மையமாக்கி, சாதாரணருக்கு வாழ்க்கையே ஒரு சுமை - என முடித்திருப்பது அர்த்தச் செறிவானது. இது போல சில தெறிப்புகள். இன்னும் உறைப்பாய் வந்திருக்கலாம் என்பது என் கருத்து. பிலோமியின் கதை இயல்பாய் தன்னோட்டமாக வந்துள்ளது. தன் தந்தை தோழி ’மும்தாஜே’க்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிர்ச்சியடைய வைக்கிறது. அதை வெளிப்படுத்தும் இறுதிப்பகுதி எத்தனையொ உள்ளார்த்தங்களைக் கொண்டுள்ளது. அவரவர் அவரவருக்குரிய பார்வைகளுடன்   அர்த்தங்கொள்ளும் பன்முகத் தளமாக ஆக்கியுள்ளார்- இது ஆகப்பெரிய வெற்ற

அன்புள்ள ஏவாளுக்கு

படம்
பெண் ஏன் அடிமையானாள்?  ”ஆதாமை , ஏனோ எனக்கு பிடிப்பதே இல்லை ஆதாமுக்கும் எனக்கும்  ஒரு பகை உண்டு . பகைக்கு காரணங்கள் எதுவும் இல்லை  அவன் ஆதாம் என்பதைத் தவிர“  கவிஞர் மனுசியின் இந்தக் கவிதை பறை அறிவிப்பாய் வருகிறது. என்ன அந்த அறிவிப்பு? அவன் ஆணாக ஆக இருக்கிறான் என்ற பிரகடணம் தான். ஆண் உலகம் முழுவதையும் அடிமையாக்கினன். நிறம், பால், வர்க்கம், சாதி  மேல் கீழ்கள் மட்டுமல்ல, புல் பூண்டு தாவரம் இயற்கை அனைத்தையும்  கீழாக்கிச் சிதைத்தான். உலகத்தை போரால், யுத்தத்தால், வஞ்சகத்தால் நிறைத்தான். ஆதாமின் இடத்தில் ஏவாள் இருந்திருந்தால் இத்தனை அநீதி, அக்கிரமம், வஞ்சனை நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்னும் ஏக்கக் கனவுகள் உருவாகின்றன.  இந்து சமூகம், இஸ்லாமியச் சமூகம், கிருத்துவச் சமூகம், சீக்கியம், ஜைனம்,  எல்லா மத சமூகங்களையும் ஆண் உருவாக்கி நிலைப்படுத்தினான். மேலாண்மை செய்கிறான்; எல்லா மத சமூகங்களும் பெண்ணை கீழாக்கி வைக்க இவனே காரணம். தனி ஒருவனாகவோ, குடும்பத்தினனாகவோ,  குழுவினனாகவோ, கட்சியினனாகவோ, சிற்றரசன், பேரரசன், அரசு,  முதலாளியம், ஏகாதிபத்தியம் எல்லாவற்றிலும் அதிகாரத்தால் நிரம்பிய மூளை அவனுடையது. எல

தடங்கண்ணி அம்மையார்

இயற்கையோடு இயைந்த உயரிய வாழ்வு என்னும் கருத்தில் ஊன்றிக் கடைப்பிடித்தவர் ம.லெ.தங்கப்பா. நோயுற்று மருத்துவமனையிலிருந்து மீண்டு, அதே உடல்நலக் குறைவுடன் வீட்டில் படுத்திருந்தார். மூத்தமகன் செங்கதிர், விண்மீன் பாண்டியன், மகள் மின்னல் ஆகியோர் ஒவ்வொரு மணித்துளியையும் தப்பவிடாது அவரைக் கவனித்து வந்தனர். அவர் கொள்கைப்படி இயற்கை மருத்துவ மருந்தும், உணவுமே அவருக்குக் ஊட்டப்பட்டது.  வாழ்க்கையை முழுமையாய்க் காதலித்து வந்தவருக்கு, வாழ்க்கைத் துணையும் காதலால் அமைந்தார். விசாலாட்சி என்றழைக்கப்பெற்ற தடங்கண்ணி அம்மையாரை காதலித்து மணந்து கொண்டார். துணைவியார் தடங்கண்ணி அம்மையார் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். பள்ளி நிர்வாகத்தில் தேர்ந்தவர். நல்லாசிரியர் விருதும் தேடிவந்தது. பணி ஓய்விற்குப்பின் புதுவை தாய்த்தமிழ்ப் பள்ளியில் ஊதியம் பெறாத ஆசிரியராகப் பணியாற்றினார். தங்கப்பாவும் தடங்கண்ணியும்  சமூகப்பற்றாளர்கள் மட்டுமல்ல, சமூகச் செயற்பாட்டாளர்கள்.  அவரது இல்லத்திற்குச் செல்கிறபோதெல்லாம் அவருடைய துணைவியார்  தடங்கண்ணி அம்மையார் ”அத்தான், சூரியதீபன் ஐயா வந்திருக்கிறார்” என்று தெரிவிப்பார். தங்கப்பாவு

யுகசந்திக் கதைகளின் நூற்றாண்டு

படம்
எவரொரு இலக்கியக்காரராக இருந்தாலும், முதலில் கவிதையில் தொடங்குவார்: அல்லது கதையில் தொடங்குவார். இவ்விரு புள்ளிகளிலும் தொடக்கம் கொள்ளாத இலக்கியாவாதியைக் காணுவது ரொம்பவும் அபூர்வம்.  இது யதார்த்தம், இயல்பு. புறத்தில் இயங்கும் சமூகம் கலைஞனது அகத்தில் தாக்கம்செய்து – அவனது அனுபவங்களைப் பாதித்து, பின்னர் தன் சுயானுபவங்களுடன் கூடிப் படைப்பு வெளிப்படுகிறது. ஒன்று எவ்வாறு நிகழ்கிறதோ, அல்லது நிகழ்ந்ததோ அவ்வாறவ்வாறே வெளிப்படுவது கலையல்ல; கலையின் ரசாயனம் நிகழ்த்தப்பட வேண்டும். ’விளக்கு மாற்றாலே அடி’ – இது ஒரு சொல்லாடல்:  “ஒன்னைய அடிக்காத விளக்குமாறு வீட்டில இருக்கலாமா?”  என்கிறாள் ஆத்திரம் கொண்ட ஒரு தாய் தன் பெண்ணை நோக்கி.  முன்னது வசவு. பின்னது கலை. ஒரு சொல்லை எந்த இடத்தில், எந்தச் சூழலில் வினையாற்ற வைத்தல் என்பது தேர்ந்த கலைஞன் நடத்தும் களைக்கூத்து. அது ஒரு கண்கட்டி வித்தை. இந்தக் கலைச் சாதுரியம் கலைஞன் கைவசப் படவேண்டும். இவ்வகையில் ஒவ்வொரு எழுதுகோலுக்கும் ஒரு சிந்தனைப் பார்வை தொழிற்படுகிறது. இப்பார்வையில் ஒருவர் வாழும் முறை, வாழ் நிலை, வளர்ப்பு, அவர் உருவாதல், குடும்பம், குடும்பம் தாண்டிய வெளி,