இடுகைகள்

சமீபத்திய இடுகை

இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் சிங்கள இராஜதந்திரம்

சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ். சேனநாயக்கா, இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் 1942-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் இந்தியா பற்றிய சுதந்திர இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கும் என்ற டி.எஸ்.சேனநாயக்காவிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார். “விரும்பியோ விரும்பாமலோ இலங்கையின் நிலைப்பாடு எப்போதும் இந்தியா பக்கம்தான் அமையமுடியும்” என்பதே. ஆனால், அவர் 1948-இல் சுதந்திரமடைந்த இலங்கையின் முதலாவது பிரதமரான போது இந்தியாவிற்குப் பாதகமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை பிரித்தானிய அரசுடன் செய்து கொண்டார். அதன்படி இலங்கையில் திருகோணமலையில் பிரித்தானிய கடற்படைத்தளமும், கட்டுநாயக்காவில் பிரித்தானிய விமானப்படைத்தளமும் அமைக்கப்பட்டன. இவ்வாறு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவிற்கு எதிராக இந்தியாவின் எதிர்நாடுகளுடன் கூட்டுச்சேரும் போக்கு சிங்களத் தலைவர்களிடம் எப்போதும் உண்டு. பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் தொடர்பாக 1970-ஆம் ஆண்டு இந்தோ-பாக்கிஸ்தானிய யுத்தம் வெடித்தபோது அப்போதைய இலங்கைப் பிரதமராயிருந்த திருமதி.சறீமாவோ பண்டா

மளிகையிலிருந்து புத்தக மாளிகை!

படம்
தொடங்கிய இடம்‌ மளிகைக்‌ கடை. அவர்‌ வேலைப்‌ பங்குதாரர்‌ (working partner). கடை உரிமையாளர்‌ முதலீட்டுப்‌ பங்குதாரர்‌. பெயர்‌ என்னவாக இருப்பினும்‌ வேலைப்பங்காளியான வேலாயுதத்துக்கு - இடது பக்க அடுக்குகளில்‌ புத்தகவரிசை. சாமான்‌ வாங்க வருவோரிடம்‌ சிநேக பாவம்‌ - இந்தப்‌ புத்தகம்‌ வாசித்தீர்களா, அந்த நாவல்‌ படித்தீர்களா என்று விசாரிப்பு; மளிகைச்‌ சிட்டையுடன்‌ புத்தகச்‌ சிட்டையும்‌ தொத்திக்‌ கொள்ளும்‌ - உரிமையாளரிடம்‌ இவ்வாறான சில சலுகைகள்‌; முன்னர்கடை இருந்த இடம்‌ கோவை ரங்கே கவுடர்‌ வீதி, இப்போது, கோவையின்‌ பிரதான மையமான டவுன்ஹாலில்‌ இரண்டு மாடிக்‌ கட்டிடத்தில்‌ விஜயா பதிப்பகம்‌. மளிகையிலிருந்து புத்தக மாளிகை! எங்கிருந்து தொடங்கி எந்தத்‌ தடத்தில்‌ நடந்து, எந்த எல்லையை அடைவது என்பதில்‌ அசாத்தியத்‌ தெளிவு. 2020 - செப்டம்பர்‌ 16. கி.ரா 98; சிறப்பாகக்‌ கொண்டாடத்‌ திட்டமிட்டிருந்தார்‌ வேலாயுதம்‌. அப்போது புதுவையில்‌ வாசித்தேன்‌. கி.ரா.வின் கதைகளில்‌ 'வேட்டி' உச்சம்‌ தொட்ட கதை. அற்புதக்‌ கதையின்‌ நினைவாக அழகான வேட்டி ஒன்று நெய்யச்‌ சொல்லி கி.ரா.வுக்குப்‌ பரிசளிக்க வேண்டுமென்று என்னிடம்‌ பேச

பா.செயப்பிரகாசக்தின்‌ "பள்ளிக்கூடம்‌” நாவல்‌: தமிழர்கள்‌ தமிழர்களாக இல்லை, சாதிகளாகச்‌ சிதைவுற்றுக்‌ கிடக்கிறார்கள்‌

படம்
1 மனித சமூகம்‌ என்பது அதிகாரங்களின்‌ விளையாட்டு மைதானமாக இருக்கிறது. இந்த அதிகாரங்கள்‌ குடும்பம்‌, மதம்‌, கல்வி, அரசு, நீதிமன்றம்‌, கலை இலக்கியம்‌ முதலிய நிறுவனங்களின்‌ வழியாக, ஒவ்வொரு தனிமனிதர்களையும்‌ திருகி, முறுக்கிச்‌ சாவி கொடுத்து மனித இயந்திரமாக ஓட வைக்கின்றன. விளைவு, ஒவ்வொரு மனிதர்களுமே அதிகார இயந்திரங்களாக மாற்றிப்போடப்‌ பட்டவர்கள்தான்‌. இப்படியான இந்த மனிதர்களை ஒரு பெரும்‌ போக்காகப்‌ பிரித்தப்‌ பார்த்தால்‌ இவர்கள்‌ இரண்டே பிரிவுக்குள்‌ வலுவாகச்‌ சமூக வெளியில்‌ இயங்கிக்‌ கொண்டே வருகிறார்கள்‌ எனக்‌ கணிக்க முடிகிறது. ஒன்று, மேற்கண்ட சமூக நிறுவனங்கள்‌ வழியாக அதிகாரத்தைக்‌ குவித்துச்‌ சுரண்டிச்‌ செழிப்பவர்கள்‌. மற்றொன்று, இந்தச்‌ சுரண்டும்‌ அதிகாரத்திற்கு எதிராக மாற்று அதிகாரத்தைக்‌ கட்டமைக்க முயலுகிறவர்கள்‌. அதாவது அறத்தின்‌ பாற்பட்டவர்கள்‌ என்று சமூக வரலாற்றில்‌ அடையாளப்‌ படுத்தப்‌ படுபவர்கள்‌. இந்தப்‌ பெரும்‌ பிரிவில்‌ நாம்‌ யார்‌ பக்கம்‌ போய்ச்சேர்கிறோம்‌ என்பதே நம்‌ வாழ்க்கைக்கான விதியாகி விடுகிறது. இந்தத்‌ தேர்வு, தந்தை பெரியார்‌ ஓரிடத்தில்‌ சொல்வது போல நமது குணநலன்‌ சார்ந்த

பண்டைக்கால இந்தியா - அணிந்துரை

படம்
  இந்திய சரித்திரத்தை எழுத வலது கால்‌ வைத்தவர்கள்‌ வேதங்கள்‌, ஸ்மிருதிகள்‌, உபநிஷதங்கள்‌, இதிகாச புராணங்களில்‌ மூழ்கினார்கள்‌. மூழ்கி, முக்குளித்து மேலெழுந்த அவர்களின் கைகளில்‌ சிப்பிகளும்‌, சங்குக்‌ கூடுகளும்‌, புல்‌ பூண்டினங்கள்‌ மட்டுமே வந்தன. வரலாற்று வரிசையாக இந்திய சமுதாயம்‌ உருவாகி வளர்ந்ததை மறுத்தார்கள்‌. பகுத்தறிவுப்‌ பூர்வமான வரலாற்றுப்‌ பொருள்‌ முதல்‌ வாதத்தை, மறுப்பதென்பது அவர்களுக்கு நோக்கமாகி விட்டது. நோக்கத்தை நோக்கி இட்டுக்கட்டி, ஒட்டுச்சுவர்‌ வைத்து, அண்டக்‌ கொடுக்க முயன்றார்கள்‌. இந்தப்‌ பாதையில்‌ இந்திய சமுதாய வரலாற்றைப்‌ பயின்ற அவர்கள்‌ சென்று சேர வேண்டிய இடம்‌ பற்றி தெளிவாக இருந்தார்கள்‌. “நாம்‌ நமக்குச்‌ சொந்தமான ஒரு புதிய பொருளைப்‌ படைத்துக்‌ கொள்வோம்‌. அது காந்தீய சோசலிசம்‌". அவர்சளின்‌ எல்லை இதுவாக இருந்தது. இந்திய உடைமை வர்க்கமும்‌, அதன்‌ அறிவாளிக்‌ கூட்டத்தினரும்‌ பிரித்தானிய கொடுங்கோலங்களுக்கு எதிராக வைத்த ஒவ்வொரு அடிவைப்பும்‌, இந்தத்‌ திசையில்‌ தான்‌ எழுந்தது. தனது நலன்களை முன்னிறுத்தியே, அதே நேரத்தில்‌ சகல மக்களுக்கும்‌ விமோசனம்‌ தருவதாகப்‌ பிரச்சாரம்

வாடிய பயிருக்கு ஒரு மழை

படம்
சூரங்குடிக்‌ கிராமம்‌, கொஞ்சம்‌ பெரிய ஊர்‌. குக்கிராமம்‌ ஒத்ததைத்‌ தட்டு வேட்டி என்றால்‌, இது இரட்டைத்‌ தட்டு வேட்டி. எப்போதாவது அரிச்சலாய்‌ சூரங்குடிப்‌ பக்கம்‌ போவதுண்டு. ஏதோ ஒரு புவிஈர்ப்பு விசை இருந்தாலொழிய, டவுன்வாசியான நான்‌ சென்னையிலிருந்து போவதற்கு அது வெகுதூரம்‌. எந்தப்‌ பருவத்திலும்‌ அந்த வீட்டில்‌ தயாராய்‌ இருக்கிற மோரில்‌ ஊறப்‌ போட்ட சுண்டைக்காய்‌, தனிப்‌பக்குவமாய்‌ செய்த ஆவாரம்‌ வத்தல்‌, சுண்ணாம்பு அளவாய்ச்‌ சேர்த்து, தேரிக்காட்டு மணலும்‌ பனஞ்செதிலும்‌ சேராமல்‌ பதமாய்‌ இறக்கப்பட்ட கருப்பட்டி, ஒரு கிராமத்து மனுசனின்‌ வாஞ்சை - இந்த நான்கும்‌ கலந்து, போகிறபோதெல்லாம்‌ கொடுத்து, கொண்டு போகச்‌ சொல்வார்‌. அவர்‌ ஒரு சொல்லேருழவர்‌. பள்ளிக்கூடத்து வாத்தியார்‌. மருத்துவருக்கு மருத்துவர்‌, வழக்குரைஞருக்கு வழக்குரைஞர்‌, பொறியாளருக்குப்‌ பொறியாளர்‌, கணினிப்‌ பொறியாளருக்கு கணினிப்‌ பொறியாளர்‌ என்று தொழில்‌ ஜாதி பார்த்து கல்யாணம்‌ கட்டிக்‌ கொள்வது போல்‌, அந்தக்‌ காலத்தில்‌ வாத்தியாருக்கு வாத்தியார்‌ என்று துணைவியைத்‌ தேடிக்‌கொண்டார்‌. அளவான வாழ்க்கை, வாத்தியார்‌ சம்பளம்‌ தவிர வேறெதற்கும்

மீரா: கவிதை எல்லைகளும் தொட முடியாத உயர்ந்த மனிதர்!

படம்

பா.செயப்பிரகாசம் சிறுகதைகளில் சமுதாயம் - ஆய்வு பேட்டி

படம்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகளில் சமுதாயம்

படம்

போராளிக்கு உரிய வாழ்வு - இரா.மோகன்ராஜன்

படம்

முன் ஏரைப் பற்றி பின் ஏரின் பார்வை

படம்
எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர் ஆசிரியர்: பா.செயப்பிரகாசம் வெளியீடு: நூல்வனம் எம்.22, 6வது அவென்யூ, அழகாபுரிநகர், ராமாபுரம், சென்னை - 6000 089 பக்:80, விலை ரூ.60 ----மயிலைபாலு செல்பேசி: 91765 49991, 94440 90186 “முன் ஏரு போற வழியில்தான் பின் ஏருபோகும்” என்பது கிராமத்துச் சொலவடை. குடும்பத்திற்குப் பொறுப்பானவர் சரியான பாதையில் சென்றால் மற்றவர்களும் அதனைப் பின்பற்றுவார்கள் என்பது இதன்பொருள். பொதுவாகவும் வயல்களில் ஏர்பூட்டும்போது நன்றாகவசப்பட்ட, வாளிப்பான, ஆழமானாலும் அகலமானாலும் அசராது நடைபோடுகிற; சண்டித்தனம் செய்யாத காளைகளைத்தான் முன் ஏரில் பூட்டுவார்கள். ஏர் ஓட்டுபவரும் நேரத்தை மட்டுமே நினைவில் கொண்டிருப்பவராக அல்லாமல் கடமைக்கு முன்னுரிமை அளிப்பவராகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். இப்படித்தான் கலை இலக்கிய உலகிலும் அடுத்தத் தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்குவோரை முன்னத்தி ஏர் என்கிறோம். மக்கள்மனங்களை உழுதுப்பண்படுத்தி நற்கருத்துக்களான வித்துக்களை விதைத்து அறிவுப் பயிர்வளர அவர்கள் காரணமாக இருக்கிறார்கள். அந்த வகைமையில் 95 வயதை நிறைவு செய்து காத்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் கி.ராஜ

தட்டாசாரி வீட்டுக் குப்பை வீணாகத்தான் போயிருக்குமோ - இரா.குமரகுருபரன்

படம்
தோல்வி கண்டு, எஸ்.எஸ்.எல்.சி மறு தேர்வுக்காக, நாட்டுப்புறவியல் ஆய்வாளரும், முன்னோடியுமான பேராசிரியர் நா.வானமாமலையின் தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து மாணாக்கரானவர் கரிசல் வட்டாரத்திலுள்ள விளாத்திகுளம் தாலுகா கே தங்கம்மாள்புரம் எஸ்.எஸ்.போத்தையா (1933 - 2012). வளமான எதிர்காலப் பணி உயர்வு, சம்பளம் அனைத்தையும் துறந்து, ‘பைத்தியக்கார மனுஷனாக’, ஊர் ஊராகச் சென்று “தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்”, “தமிழக நாட்டுப் பாடல்கள்” ஆகிய நூல்கள் வெளிவர நாட்டுப் புறப் பாடல் கள் திரட்டியதை சிட்டைகளில்,சிகரெட் அட்டைக ளில், திருமண அழைப்பிதழ்களில், நாடக நோட் டிசு முதுகுகளில், குப்பைக்கூடை யில் கிடக்கும் ஒருபக்கத் தாள்களில், ஏன், உள் ளங்கையில் கூட அவசரத்துக்கு எழுதிக் குறிப் பெடுத்து அவர் பதிந்து வைத்திருந்தார். இதை அர்ப்பணிப் புணர்வுடன் சமகாலத்துக்கு “எஸ்.எஸ்.போத் தையா -நாட்டார் இயலின் தெக்கத்தி ஆத்மா” என்று முதல் நூலாகத் தொகுத்துள்ளார் கரிசல் இலக்கியவாதி பா.செயப்பிரகாசம். அடுத்த தொகுதிகள் “கரிசல் சொலவடைகள், நம்பிக் கைகள், தொக்கலவார் வரலாறு”, “எஸ்.எஸ்.போத்தையா அவர்களுக்கு பேரா நா.வா, கி.ரா, பொன்னீலன், பா.

காலகட்டம்‌ சார்ந்துதான்‌ இலக்கிய வெளிப்பாடும்‌ இலக்கியவாதியும்‌ இருக்கிறார்கள்‌ - பா.செயப்பிரகாசம்‌ நேர்காணல்

படம்
(புதிய புத்தகம் பேசுது, ஜூலை 2004) சமூக அக்கறையுடன்‌ எழுதுகிற தமிழ்‌ எழுத்தாளர்களில்‌ மிக முக்கியமானவர்‌ பா.செயப்பிரகாசம்‌ தன்‌ மண்ணையும்‌ மக்களையும்‌ முப்பது ஆண்டுகளாக படைப்புகளாக்‌கி வருபவர்‌. ஒரு ஜெருசலேசம, காடு, கிராமத்து ராத்திரிகள்‌, இரவுகள்‌ உடையும்‌, மூன்றாவது முகம்‌, புதியன, இரவு மழை, புயலுள்ள நதி, பூத உலா ஆகியவை இவரது சிறுகதைத்‌ தொதிகள்‌. கட்டுரை தொகுதிகள்: தெக்கத்தி ஆத்மாக்கள்‌ வனத்தின்‌ குரல்‌, கிராமங்களின்‌ கதை, நதிக்கரை மயானம்‌. கவிதைத்‌ தொகுதிகள்‌: சோசலிசக்‌ கவிதைகள்‌, இரத்த சாட்சிகள்‌, அவசரநிலை ஆகிய மூன்றும்‌ இவர்‌ தொகுத்த மொழிபெயர்ப்பு கவிதைத்‌ தொகுதிகள்‌. இத்தொகுதிகளில்‌ இவரது மொழிபெயர்ப்பு கவிதைகளும்‌ இடம்பெற்றுள்ளன. களப்‌ பணியாளர்‌, பத்திரிகையாளர்‌, பேச்சாளர்‌ என பல்வேறு தளங்களில்‌ செயல்படும்‌ இவர்‌ 'சூரியதீபன்‌' என்ற பெயரிலும்‌ அறியப்படுகிறார்‌. நீங்கள்‌ பிறந்த ஊர் குடும்பச்‌ சூழல்‌... இவற்றினூடாக ஒரு கதைக்காரராக எவ்வாறு பரிணமித்தீர்கள்‌? மதுரைக்குத்‌ தென்புற வட்டாரம்‌ எல்லாவற்றையும்‌ கரிசல்‌ சீமை என்பார்கள்‌. கரிசல்‌ சீமையிலே முன்பு திருநெல்வேலி மாவட்டம்‌

என்பும் உரியர்‌ பிறர்க்கு - பாரதிபுத்திரன்

படம்