இடுகைகள்

சமீபத்திய இடுகை

ஆய்வு: மணல் புதினத்தில் ஆற்றுமணல் கொள்ளையும் நதியின் சிதைவும்

படம்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் வெளிப்படுத்தும் வறுமைநிலை

படம்

உலக இலக்கியம், ஒரு ஜெருசலேம் - பா.செயப்பிரகாசம் நினைவேந்தல் சிறப்புக் கருத்தரங்கில் நெகிழ்ச்சி தருணங்கள்

படம்

கி.ரா - ஞானபீடம்‌ - கடிதங்கள்

படம்
அன்புள்ள ஜெ. கி.ராவுக்கு ஞானபீடம்‌ - இன்றைய தேவை. கி.ரா அவர்களின்‌ தீவிர வாசகி என்ற முறையில்‌ கி.ரா.வுக்கு ஞானபீடம்‌ என்று தாங்கள்‌ விடுத்த அறைகூவல்‌ நிறைவாக இருந்தாலும்‌, இதைக்‌ கூடச்‌ சொல்லிச்‌ செயலாற்றவேண்டிய சூழலில்‌ இருக்கிறோமே என்ற கசப்புணர்வும்‌ சேர்ந்தபடி தான்‌ உள்ளது. ஒரு மாபெபரும்‌ எழுத்தாளரைரக்‌ கொண்டுசென்று சேர்க்கவேண்டிய நிலை என்பதே சற்று அருவருக்கத்தக்க செயலாக எனக்குத்‌ தோன்றுகிறது என்று முதலில்‌ சொல்லிவிடுகிறேன்‌ - தவறென்றால்‌ மன்னிக்கவும்‌. நாடெங்கிலும்‌ இருந்து வாசிப்புப்‌ பசியும்‌ நுண்ணுணர்வும்‌ உள்ளவர்கள்‌ தானே கூட்டம்கூட்டமாக அவரைத்‌ தேடிவரும்‌ நிலை இருக்கவேண்டும்‌! கி.ரா.வின்‌ படைப்பாற்றலும்‌ மேதமையும்‌ சொல்லித்தான்‌ புரியவைக்கப்படவேண்டும்‌ என்றால்‌, அப்படிப்பட்ட வாசகப்பரப்புக்கு மூன்றாம்‌ தரக்‌ கவிஞர்களும்‌ அசட்டு எழுத்தாளர்களுமே நாயகர்களாக இருக்கட்டுமே. கி.ரா.வை அவரது வாசகர்கள்‌ நாம்‌ கொண்டாடிவிட்டுப்‌ போகிறோம்‌. அது நமக்குக்‌ கிடைத்த பெரும்‌ பேர்‌. ஏன்‌ அவரது அருமை புரியாதோர்‌ முன்னிலையில்‌ அவர்‌ ஆக்கங்களைக்‌ கொண்டுசெல்ல வேண்டும்‌ என்று உணர்வதாக முதலில்‌ பதிவுச...

தெக்கத்தி ஆத்மாக்கள் நூல் அறிமுகம் - நந்தன் (1-15 மார்ச் 2000)

படம்

கரிசல் மண்ணும் கானல் அலைகளும்

படம்

இவர்கள் மகாத்மாக்கள் அல்ல - மயிலை பாலு

படம்

தெக்கத்தி ஆத்மாக்கள் - நூல் விமர்சனம், கோடு (ஏப்ரல் - ஜூன் 2000)

படம்

அந்தக் கடைசிப் பெண்ணாக - இலக்கிய ரசனைகளோடு இணைந்த அனுபவங்கள்

படம்

ஈழக் கதவுகள் நூல் பற்றி சூரங்குடி அ.முத்தானத்தின் கடிதம்

படம்

பா.செயப்பிரகாசம் பற்றி கிரா-வின் குறிப்புகள்

படம்

புரிதல்களுக்கான போர்ப்பூமி

படம்

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களின் 'காடு' சிறுகதைத் தொகுப்பு - வாசகர் மதிப்புரை

படம்
பொதுவாக எனது வாசிக்கும் ஆர்வம் வரலாற்று நூல்களிலும், கட்டுரைத் தொகுப்புகளிலும் இருக்கும் அளவிற்கு சிறுகதை தொகுப்புகளில் இருப்பதில்லை. (காரணம் கதைகளைப் படித்து முடித்ததும் அதன் தாக்கத்திலிருந்து அவ்வளவு எளிதில் என்னால் வெளிவர முடிவதில்லை) ஆனால், காடு சிறுகதை தொகுப்பின் முதல் கதையின் முதல் வரியைப் எதேச்சையாக படித்த போது அவ்வரியே அக் கதைக்குள் என்னை இழுத்துச் சென்றது. "கடவுள் எவ்வளவு உயரம் இருப்பார் தெரியுமா?" என்ற அந்த வரியே அட என ஆச்சரியப்பட வைத்து கதை முழுவதையும் வாசிக்கச் செய்தது. சமூகத்தில் நாம் பார்க்கக்கூடிய, காதால் கேட்கக்கூடிய ஒரு  சம்பவம்தான் கதையின் மையக்கரு. ஆனால் ஆசிரியர் அதை சொல்லிய விதம் அடடே போட வைக்கிறது. கதையில் இருக்கும் ஒரு பாராவை அப்படியே தருகிறேன் பாருங்கள் எத்தனை ரசனையுடன் எழுதி இருக்கிறார் என்று. "கரிசல் பூமியில் ஆண்களும் கர்ப்பம் கொள்வது உண்டு. கொத்தமல்லி காடு வெளேரென்று பூக்கிற போது ஒவ்வொரு ஆணும் கர்ப்பம் கொள்கிறான். மசக்கையின் ஆயாசமும், களைப்பும் அவன் முகத்தில் தெரிகிறது. பருவ மாறுதல்களால் தீட்டுப்படாமல் காடு விளைந்து விட வேண்டும் என்று அவன் கவலைப...

ஒரு படைப்பாளியின் கதைப் பெண்டிருக்காக கலங்கிய அரங்கம்

படம்
காலத்தில் கரைந்து போகாமல் காலமாகி நிற்கிற ஒருவரை நினைவுகூரும்  கூடுகைகளில் அவர் சந்தித்த சோதனைகளையும், வென்று காட்டிய சாதனைகளையும் பகிர்ந்திடும்போது பேசுகிறவர்களும் கேட்கிறவர்களும் உணர்ச்சிவசப்படுவது புதிதல்ல. ஒரு படைப்பாளியை நினைவுகூர்வதற்கான அந்தக் கூடுகையிலும் உரையாளர்கள், அவையினர் இரு தரப்பினரும் நெகிழ்ந்தார்கள். அவருடைய வாழ்க்கைத் தடங்களால் அப்படி உணர்ச்சிமயமாகவில்லை, மாறாக, அவருடைய எழுத்தாக்கங்களைச் சொன்னபோது, கதை மாந்தர்களை எடுத்துக்காட்டியபோது அரங்கத்தினரும், தாங்கள் சந்தித்த மனிதர்கள் பற்றிய நினைவுகள் கிளர்தப்பட்டவர்களாக ஆழ்ந்த உணர்வில் மூழ்கி எழுந்தார்கள். எழுத்தாளரும், மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் முன்னணியில் நின்றவருமான பா.செயப்பிரகாசம் நினைவு கருத்தரங்கில் இந்த மாறுபட்ட அனுபவம் வாய்த்தது. சமூகப் போராளி எளியோரின் வழக்குரைஞர் பி.வி.பக்தவச்சலம் அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு இணைந்து அந்தக் கருத்தரங்கத்தை சனிக்கிழமையன்று (2025 மார்ச் 15), சென்னையின் ‘இக்சா’ வளாகச் சிறு கூடத்தில் நடத்தின, பா.செ‘யின் படைப்புலகம்...

நாட்டார்‌ இயலின்‌ தெக்கத்தி ஆத்மா - தொகுப்பாளர்‌ உரை

படம்
எஸ்‌.எஸ்‌.போத்தையா என்னவாக இருக்க நினைத்தார்‌? “உள்ளத்தால்‌ உயர்வுள்ளல்‌” - எனும்‌ அறமொழிக்குப்‌ பொருத்தமாய்‌ - நினைப்புக்கு ஏற்ப வாழ்க்கை அமைகிறது என்பது பொதுவான நம்பிக்கை. நல்ல கணவன்‌ அல்லது நல்ல மனைவி அமைய வேண்டுமென்று நினைப்புக்களில்‌ விதை போடுகிறோம்‌. பெரும்பாலான வாழ்க்கைகளில்‌ விதையொன்று போட சுரையொன்று முளைக்கிறது. சமூக அமைப்பில்‌ கணவன்‌ என்பதும்‌ மனைவி என்பதும்‌ வேறுபாடான யதார்த்தங்களால்‌ தீர்மானிக்கப்படுகிறது. நினைப்பு நிறைவேறாத பட்சத்தில்‌. “திருமணம்‌ சொர்க்கத்தில்‌ நிச்சயிக்கப்படுகிறது” “மனைவி அமைவதெல்லாம்‌ இறைவன்‌ கொடுத்த வரம்‌” - இவ்வாறு சொர்க்கத்துக்கோ, கடவுளுக்கோ, பொறுப்பைத்‌ தள்ளி விடுகிறோம்‌. கனவினும்‌ கூடுதலான புனைவு இது. போத்தையா காலத்தின்‌ கிராமப்புற ஆசிரியர்களுக்கு அவர்கள்‌ என்னவாக வேண்டுமென விரும்புகிறார்களோ, அதுவாக ஆகிற வாய்ப்புகள்‌ சூழ இருந்தன. 1950, 60-களின்‌ ஆசிரியர்கள்‌ சுதாரிப்பானவர்கள்‌. கிராமங்களில்‌ இருந்தாலும்‌, அவர்களுக்கு நகரவாழ்வின்‌ சூழ்ச்சி தட்டியிருந்தது. கைக்கும்‌ மெய்க்கும்‌ இல்லாமல்‌ (அன்றாடச்‌ செலவுக்குமில்லாமல்‌) இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்றிரு...

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

சென்னை, 22-03-2003 அன்பு நண்பருக்கு, கடிதம்‌ வந்தது. இப்படி அவ்வப்போது தொடர்பு கொள்ளுங்கள்‌. நனவில்‌ உயிர்த்தெழுதல்‌ நிகழும்‌.  அந்தக்‌ கதை நீண்டதாக இருந்ததால்‌, படைப்பாளிக்கு எல்லாமே முக்கியம்‌ தானே, வாசிப்பில்‌ விடுபட்டுத்‌ தெரிகிற இடங்களை வெட்டுங்கள்‌ என்று சொல்ல, ஏகத்துக்கும்‌ வெட்டி, இஷ்டத்துக்கு பகுதி பிரித்து என்னென்னமோ செய்து விட்டார்கள்‌. அதனால்‌ ஒரு எழவும்‌ புரியாது. புரியாததுக்கு எல்லாம்‌ இருக்கறதே ஒரு பெயர்‌ “பின்‌ நவீனத்துவம்‌”! 30-03-2003-ல்‌ கல்கி இதழில்‌ சாகித்ய அகாதமி பற்றி எனது நேர்காணல்‌ வருகிறது. சாகித்ய அகாதமியை எப்படி இந்துத்வா ஆக்கரமித்துவிட்டது என்று விளக்கியுள்ளேன்‌. எனக்கென்னமோ பிரகாஷை ஒன்றுக்கும்‌ ஆகாமல்‌ செய்துவிட்டது போல்‌ தோன்றுகிறது. அவனுக்குள்‌ எப்பேர்ப்பட்ட கலைஞன்‌ இருக்கிறான்‌. வீர.வேலுச்சாமி என்ற ஆகாயமார்க்க நிழல்பட்டதால்‌ அவனுக்குள்‌ கருவுற்றது படைப்பாற்றல்‌. வந்தது வரட்டும்‌ என்று ஒரு நாவல்‌ எழுதச்‌ சொல்லுங்கள்‌ - வளமாய்‌ வெளிப்படும்‌. நட்புடன்‌ பா.செயப்பிரகாசம்‌

வீர.வேலுச்சாமி அஞ்சலி கடிதம்

படம்
சென்னை 8.7.2004 அன்புள்ள பிரகாஷ்‌, அப்பா காலமாகிவிட்டார்‌ என கி.ரா சொல்லித்தான்‌ தெரிந்தது. நான்கு நாட்களாய்‌ தொலைபேசியில்‌ முயற்சி செய்தேன்‌. “எல்லா வழித்தடங்களும்‌ சுறுசுறுப்பாக இருக்கின்றன” என்ற பதிலே வந்தது. தொயந்தடியாய்‌ என்ன கோளாறு என்று தெரியவில்லை. பிறகுதான்‌ “நீத்தார் நினைவு' பத்திரிகை கிடைத்தது. கி.ரா கடிதத்தில்‌ எழுதியிருந்தார்‌, “கிட்டத்தட்ட எல்லாமே உதிர்ந்துகொண்டு வருகிறது என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. நாமும்‌ எப்போ “பொத்‌”தென்று உதிர்ந்து விழப்‌ போகிறோமோ தெரியல” நேற்று கந்தர்வன்‌; கொஞ்சம்‌ முன்னால்‌ கவிஞர்‌ மீரா, இன்று அப்பா. இப்போதுதான்‌ எழுதியது போலிருக்கிறது கந்தர்வனைப்‌ பற்றி. மரணக்‌ குறிப்பு எழுதி கணையாழி இதழில்‌ வெளியாகி, முழுசாய்‌ ஒரு மாசம் கூட முடியவில்லை. “வீர, வேலுச்சாமியை வாசித்திருக்கிறீர்களா? அற்புதமான கலைஞன்‌. யதார்த்தம்னா என்னாங்கறத அவர்ட்டதான்‌ தெரிஞ்சிக்கிறனும்‌” என்றார்‌ கந்தர்வன்‌. அவர்தான்‌ அப்பாவைப்‌ பற்றி முதலில்‌ என்னிடம்‌ சொன்னவர்‌. பிறகு தான்‌ வீர.வேலுச்சாமியை தாமரை இதழ்‌ மூலம்‌ கிரகிக்க ஆரம்பித்தேன்‌. எழுதிய எழுத்தின்‌ பச்சை காயாமலிருக்கிறபோதே,...

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

படம்
(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சைதை கிளைப் பேரவையில் `நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டு சவால்கள்' என்ற தலைப்பில் தோழர் சூரியதீபன் ஆற்றிய உரையின் சுருக்கம். எழுத்துருவம்: சூரியசந்திரன்) தென்மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்றொரு சிறுநகரம். அந்த நகரத்துக்கு நான் சென்றிருந்தபோது பொங்கல் நேரம். வீதிகளெல்லாம் சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தன. எல்லா வாசல்களிலும் இரவு முழுவதும் கண்விழித்து கோலங்கள் இட்டிருந்தார்கள். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நானும் எனது நண்பரும் கோலங்களைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தோம். அந்தக் கோலங்கள் ஒவ்வொன்றையும் தாண்டிச் செல்கிறபோது என்னுடைய கால்கள் சடக்கென ஒடிந்து விழுவதைப்போல ஒரு கோலத்தின் மீது நின்றது. காரணம் அந்தக் கோலத்தில் Happy pongal என்கிற வாசகம் இருந்தது. காலையிலே, அவர்கள் வீட்டு முற்றத்திலே பொங்கலிட்டு முடிந்த பிறகு ஒன்பது மணியளவில் ஒலிபெருக்கியிலிருந்து “இப்போது நாம் பொங்கலிடுவதற்காக பிள்ளையார் கோயில் முன் கூடுவோம்” என்றொரு அறிவிப்பு வருகிறது. அதாவது, இன்னொரு பொங்கலுக்குத் தயாராகும்படியான அறிவிப்பு அது. இந்த இரண்டு சம்பவங்களிலும் இரண்டு பண்பாட்ட...

மலேயா கணபதி

படம்
முதுபெரும்‌ பொதுவுடமைக்‌ கட்சித்‌ தோழர்‌ கே.டி.கே.தங்கமணி மலேசியாவில்‌ பல்வேறு பிரச்சாரக்‌ கூட்டங்களை முடித்துக்‌ கொண்டு, இந்தியாவுக்குக்‌ கப்பல்‌ ஏறுகிறார்‌. கப்பல்‌ ஏறுகிற நேரத்தில்‌ அவர்‌ முன்னே ஆயுதம்‌ தாங்கிய தோழர்கள்‌ செவ்வணக்கம்‌ செலுத்தி விடை தருகின்றனர்‌. செவ்வணக்கத்தை ஏற்றுக்‌ கெண்டு “நீங்கள்‌ யார்‌” எனக்‌ கேட்கிறார்‌ கே.டி.கே. அதற்கு அவர்கள்‌ பதில்‌ “தங்கள்‌ பாதுகாப்புப்‌ பணிக்காக, மலேயா கம்யூனிஸ்டு கட்சி நியமித்த கொரில்லாக்கள்‌". ஒரு தோழரின்‌ உயிர்‌, உடல்‌ அகில உலகத்துக்கு மட்டுமல்ல, நான்கு கோடித்‌ தமிழர்களுக்கும்‌ பத்திரமாக திருப்பி ஒப்படைக்கிற, இந்த பாதுகாப்புக்‌ கவசத்தின்‌ சூத்ரதாரி கணபதி. தீண்டாமை என்பது ஓட்டுவார்‌ ஒட்டி நோய்‌. காசம்‌ (சயரோகம்‌), சொறி, சிரங்கு, படை போன்ற நோய்களுக்கு இந்தக்‌ குணம்‌ உண்டு. தமிழ்‌நாட்டிலிருந்து மலேயா, சிங்கப்புர்‌, ரங்கூன்‌ சென்ற தமிழர்கள்‌, தங்களுடன்‌ இந்த தீண்டாமை நோயையும்‌ இடுக்கி கொண்டு சென்றார்கள்‌. தமிழகத்‌ தேநீர்க்‌ கடைகளில்‌ தனித்‌ தம்ளர்கள்‌ என்றால்‌ மலேயாவில்‌ தனித்‌ தகர டப்பாக்கள்‌. தாழ்த்தப்பட்ட மக்களின்‌ கண்ணீரின்‌ உப்பு,...