ஒரு இந்திய மரணம் - சில படிப்பினைகள்
ஓரிரு ஆண்டுகளுக்குள் முன்னும் பின்னுமாய் பல கொடிய நிகழ்வுகள் அரங்கேறிவிட்டன. 'ராகிங்' கொடுமைக்குத் தப்ப முடியாமல் போன அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் நாவரசு. பருந்துகளின் கொடூர நகங்களுக்குப் பிடிபடாமல் தப்பியோடிய கோழிக்குஞ்சு போல் மாணவி சரிகா. கணவன் கைப்பிடித்தும் கருக்கப்பட்ட மலர் பாண்டிச்சேரி பார்வதி ஷா. வாழ்க்கை - இவர்களுக்கு முடிந்து விட்டது - மீள முடியாத இவர்களின் வாழ்வு முடிவை மரணம் என்று சொல்வதை விட 'வன்கொலை' என்று சொல்வதே பொருத்தம். பார்வதி ஷாவின் கொலை பாண்டிச்சேரியை மட்டுமல்ல; மாணவர்கள் நாவரசு, சரிகா கொலை போலவே தமிழ்கூறும் நல்லுலகை உலுக்கி எடுத்திருக்கிறது. பார்வதி ஷா கொலை அம்பலப்படுத்துதலில், ஊடகங்கள், மக்கள் உரிமை அமைப்புகள், சமூக இயக்கங்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கின்றன. பி.யூ.சி.எல் உறுப்பினர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்டவர்கள் சாலை மறியலைத் தொடங்குகிறார்கள். பொதுமக்களின் விழிப்புணர்வும் சமூக அக்கறையும் ஏதோ ஒரு புள்ளியில் சமூக நடவடிக்கையாக மாறக் காத்திருக்கின்றன. அது தொடங்கி வைக்கப்படுகிறது. குற்றவாளியான கமல் ஷா