கி.ரா, கு.அழகிரிசாமி, மேலாண்மை பொன்னுச்சாமி, லட்சுமணப் பெருமாள் என்று காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து வரிசையில் மற்றுமொரு தவிர்க்க முடியாத பெயர் பா.செயப்பிரகாசம். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்து இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறவர். தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறையில் இணை இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற செயப்பிரகாசம் ‘சூரியதீபன்’ என்ற புனைப் பெயரில் எழுதிவருகிறார். 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருந்தார். தாமரை, தினமணி, புதிய பார்வை, தீராநதி, கணையாழி, காலச்சுவடு, மனஓசை போன்ற இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. சமூக நீரோட்டத்துடன் செல்லாமல் எதிர்க் கருத்தியலை வைத்து நடைபோட்ட மனஓசை இதழின் பொறுப்பாசிரியராக இருந்தவர். இலக்கிய மேடைகளிலும், அரசியல் அரங்குகளிலும் கருத்து செறிந்த சொற்பொழிவுகள் ஆற்றுபவர். இதுவரை கதை உலகின் காலடி படாத கிராமத்தின் ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களின் பாடுகளையும் தன் புனைவிலக்கியத்தில் சித்தரிக்கிறார். இவரின் கதைகள் மனிதர்களின் துய
தோழர் பா.செயப்பிரகாசம் உரை - "இலங்கையில் தமிழீழம்" (Tamil nation in srilanka) எனும் நூலாசிரியர் - ரான் ரைட்னவருடன் ஒரு கலந்துரையாடல் 13-11-2011 புதுச்சேரி கோ.கேசவனின் திறனாய்வாளுமை - நூல் வெளியீட்டு விழா - எழுத்தாளர் சூரியதீபன் - 01 November 2014 பா.செயப்பிரகாசம் உரை | அகரமுதல்வன் - உலகின் மிக நீண்ட கழிவறை மக்கள் கலைஞர் கே.ஏ.குணசேகரன் நினைவாஞ்சலி அழியாத கோலங்கள் @pathayam book release function மாவீரன் பண்டாரவன்னியன் – கண்ணகி நூல் வெளியீட்டு விழா, நோர்வே - பேச்சு சென்னையில் இடம் பெற்ற பண்டாரவன்னியன் நூல் வெளியீட்டு விழா - தலைமை உரை - எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் "அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு" நூல் வெளியீடு, சென்னை புத்தககண்காட்சி - 08 ஜனவரி 2012 தோழர் சண்தவராசா அவர்களின் மனுஷி
அது ஒரு துணிச்சலான காரியம். மாலைமயங்கும் வேளை திருவல்லிக்கேணியிலுள்ள அச்சகத்திலிருந்து ‘மனஓசை’ என்ற கலை, இலக்கி இதழின் 2000 படிகளுள்ள கட்டுக்களை ஏற்றிக் கொண்டு ரிக்ஷா பச்சையப்பன் கல்லூரி வாசலில் நுழைந்து மாணவர் விடுதிக்குச் சென்றது (அக்காலத்தில் ’தானி’ என்று சொல்லப்படும் ஆட்டோக்கள் இல்லை). கல்லூரி விடுமுறைக் காலம்: வெளிச்சப் புள்ளிகள் ஓரிரு அறைகளில் அசைந்தன. ’மனஓசை இதழ்களை’ அஞ்சல் மூலம் அனுப்பும் பணி முதலில் என் வீட்டில் நடந்தது. வீடு சென்னை அமைந்தகரையிலிருந்தது; ஒற்றை அறை கொண்ட வீடு. அமைந்தகரை பேருந்து நிறுத்தத்துக்கு அடுத்த பேருந்து நிறுத்தம் பச்சையப்பன் கல்லூரி. மாலை வேளையில் எங்களுடன் மாணவ நண்பர்களும் இணைந்து ’மனஓசை’ இதழ்களை அஞ்சலில் அனுப்ப விடுதி பொருத்தமாயிருந்தது. ஏதேனும் ஒன்று நிகழ்ந்த பின், இப்படி செய்திருந்தால் இது நிகழ்ந்திருக்காதே என்ற யோசிப்புத் தோன்றுகிறது: அப்படித்தான் அன்றைய நிகழ்வும் நடந்தது. நிகழ்ந்த ஒன்று எப்போதும் தனக்குரிய செயல்களில் தீவிரமடைந்துவிடும். பாதகமானதும் சாதகமானதுமான விளைவுகள் வந்தடையும். அவர் விடுதியின் முதிய காவலாளி, பார்வையற்றவர்: கைத்தடியால
ஓரிரு ஆண்டுகளுக்குள் முன்னும் பின்னுமாய் பல கொடிய நிகழ்வுகள் அரங்கேறிவிட்டன. 'ராகிங்' கொடுமைக்குத் தப்ப முடியாமல் போன அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் நாவரசு. பருந்துகளின் கொடூர நகங்களுக்குப் பிடிபடாமல் தப்பியோடிய கோழிக்குஞ்சு போல் மாணவி சரிகா. கணவன் கைப்பிடித்தும் கருக்கப்பட்ட மலர் பாண்டிச்சேரி பார்வதி ஷா. வாழ்க்கை - இவர்களுக்கு முடிந்து விட்டது - மீள முடியாத இவர்களின் வாழ்வு முடிவை மரணம் என்று சொல்வதை விட 'வன்கொலை' என்று சொல்வதே பொருத்தம். பார்வதி ஷாவின் கொலை பாண்டிச்சேரியை மட்டுமல்ல; மாணவர்கள் நாவரசு, சரிகா கொலை போலவே தமிழ்கூறும் நல்லுலகை உலுக்கி எடுத்திருக்கிறது. பார்வதி ஷா கொலை அம்பலப்படுத்துதலில், ஊடகங்கள், மக்கள் உரிமை அமைப்புகள், சமூக இயக்கங்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கின்றன. பி.யூ.சி.எல் உறுப்பினர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்டவர்கள் சாலை மறியலைத் தொடங்குகிறார்கள். பொதுமக்களின் விழிப்புணர்வும் சமூக அக்கறையும் ஏதோ ஒரு புள்ளியில் சமூக நடவடிக்கையாக மாறக் காத்திருக்கின்றன. அது தொடங்கி வைக்கப்படுகிறது. குற்றவாளியான கமல் ஷா
1962 - 63ல், மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் இளங்கலை முதலாமாண்டு. கவிஞர் நா.காமராசன், இளங்கலை இரண்டாமாண்டு. கவிஞர் அபி, இளங்கலை மூன்றாமாண்டு. கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், முதுகலைத் தமிழ் இறுதியாண்டு. கவிஞர் இன்குலாப், எனக்குப் பின்னால் அடுத்த ஆண்டு இளங்கலைத் தமிழில் சேர்கிறார். அவருடைய வகுப்புத் தோழர் – பின்னாளில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்து மறைந்த கா.காளிமுத்து. மதுரை தியாகராசர் கல்லூரி விடுதியில் 1965 சனவரி 25-ம் நாள், இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி, உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் முன் ஆலோசிப்பு நடந்தது. நண்பர்கள் காமராசன், காளிமுத்து ஆகியோர், ‘இந்தியே ஆட்சி மொழி’ என்று அறிவிக்கும் சட்டப் பிரிவு பிரதியை எரிப்பதென முடிவு செய்தனர். ‘சட்டத்தை’ எரிக்கும் நண்பர்களை அக்காரியம் நிறைவேற்றும் முன் கைது செய்யாமலிருக்க, ஒரு தலைமறைவு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தினோம். எங்களில் சிலரைத் தவிர அந்த இடம் வேறு யாருக்கும் தெரியாது. சனவரி 25-ம் நாள் அன்று மாணவர்கள் சுற்றிலும் பாதுகாப்பாக வர, காமராசனும் காளிமுத்துவும் திடல் மேடையில் ஏறி, சட்டப
கருத்துகள்
கருத்துரையிடுக