வீர.வேலுச்சாமி அஞ்சலி கடிதம்
சென்னை 8.7.2004 அன்புள்ள பிரகாஷ், அப்பா காலமாகிவிட்டார் என கி.ரா சொல்லித்தான் தெரிந்தது. நான்கு நாட்களாய் தொலைபேசியில் முயற்சி செய்தேன். “எல்லா வழித்தடங்களும் சுறுசுறுப்பாக இருக்கின்றன” என்ற பதிலே வந்தது. தொயந்தடியாய் என்ன கோளாறு என்று தெரியவில்லை. பிறகுதான் “நீத்தார் நினைவு' பத்திரிகை கிடைத்தது. கி.ரா கடிதத்தில் எழுதியிருந்தார், “கிட்டத்தட்ட எல்லாமே உதிர்ந்துகொண்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். நாமும் எப்போ “பொத்”தென்று உதிர்ந்து விழப் போகிறோமோ தெரியல” நேற்று கந்தர்வன்; கொஞ்சம் முன்னால் கவிஞர் மீரா, இன்று அப்பா. இப்போதுதான் எழுதியது போலிருக்கிறது கந்தர்வனைப் பற்றி. மரணக் குறிப்பு எழுதி கணையாழி இதழில் வெளியாகி, முழுசாய் ஒரு மாசம் கூட முடியவில்லை. “வீர, வேலுச்சாமியை வாசித்திருக்கிறீர்களா? அற்புதமான கலைஞன். யதார்த்தம்னா என்னாங்கறத அவர்ட்டதான் தெரிஞ்சிக்கிறனும்” என்றார் கந்தர்வன். அவர்தான் அப்பாவைப் பற்றி முதலில் என்னிடம் சொன்னவர். பிறகு தான் வீர.வேலுச்சாமியை தாமரை இதழ் மூலம் கிரகிக்க ஆரம்பித்தேன். எழுதிய எழுத்தின் பச்சை காயாமலிருக்கிறபோதே,...
கருத்துகள்
கருத்துரையிடுக